Monthly Archives: செப்ரெம்பர் 2011

ரெயினீஸ் ஐயர் தெரு 2A

This gallery contains 10 photos.

சம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரண்டு உலகங்கள்

This gallery contains 8 photos.

  வண்ணநிலவன் புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள்….. விக்கிரமாதித்யன்   ..   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

மிருகம்

This gallery contains 2 photos.

வண்ணநிலவன் நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி கனமாக இருந்தது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ஓரமாக நின்றிருந்த குத்துக்கல்லின் மேல் உட்கார்ந்தார் சிவனு நாடார். அவர் உடம்பிலிருந்து அடித்த நாற்றம் அவருக்கே குமட்டியது. பீடி குடித்தே ஏழெட்டு நாளாகி விட்டது. இன்னமும் பீடி வாடை முகத்துக்குள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கடல்புரத்தில் 1

This gallery contains 9 photos.

தலித்தியம்’, ‘பெண்ணியம்’ ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுதமுடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். நாவலின் அடிநாதம் அன்புதான். ‘மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

காலம் – தொடர்

This gallery contains 1 photo.

இந்த வண்ணநிலவனின் அருமையான கதையில் ஏராளமான எழுத்துப் பிழைகளை வாசகர்கள் காணலாம். என்னால் முடிந்தவரையிலும் சரிசெய்திருக்கிறேன், மீதியையும் சரிசெய்ய வழி தெரிந்தவர்கள் தயவுசெய்து திருத்தித் தரவும், அல்லது திருத்த வழிகாட்டவும்… (எஸ் ஐ சுல்தான்) வண்ணநிலவன்   அன்றுதான் எல்லா கோர்ட்களும் திறந்தன. ஓரு மாதக் கோடை விடுமுறையும் எப்படிக் கழிந்ததென்பúத் தெரியவில்லை நெல்லையப்பனுக்கு. இரண்டு வெகேஷன் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரேபியா

This gallery contains 7 photos.

கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கம்பாநதி 4

This gallery contains 13 photos.

இது ஒரு நதியை பற்றிய கதையல்ல. நதியை சுற்றி வாழும் மனிதர்கள் பற்றியது. ‘கம்பாநதி’ அருகில் வாழும் மனிதர்களின் ஆசை, கனவு, வாழ்க்கை பற்றியது. நாவலில் நாயகன், நாயகி என்று யாருமில்லை. எல்லோரும் சம்பவத்தால் பின்னப்பட்டவர்கள். முக்க்கிய கதாபாத்திரங்களான பாப்பையா, சுந்திர பிள்ளை, சௌந்திரம், சிவகாமி, கோமதி போன்ற பாத்திரங்களை சொல்லலாம்…………. (எச்.முஜீப் ரஹ்மான்) வண்ணநிலவன் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரெயினீஸ் ஐயர் தெரு

This gallery contains 9 photos.

எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன்.  சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் வாழ்வில் மரியாதையும் நேசத்தையும் கொடுக்கிறோம் என்று நமக்குத் தெரிந்து விடும். காரணங்களற்ற நேசம் யார் … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கேணி சந்திப்பு – வண்ணநிலவன்

http://www.velavanam.com/2011/08/blog-post.html “நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது..” என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான். வண்ணநிலவன் என்ற … Continue reading

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எளியவர்களின் மனசாட்சி – வண்ணநிலவன் கதைகள்

This gallery contains 1 photo.

சு.வேணுகோபால்   http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12557:2011-01-21-10-37-21&catid=1251:2011&Itemid=510 எழுபதுகளில் தீவிரத்துடன் இயங்கிய இளம் எழுத்தாளர்களில் வண்ணநிலவன் முதன்மையானவர். ‘எஸ்தர்’, ‘பாம்பும் பிடாரனும்’ என்கிற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், ‘கடல் புரத்தில்’ (1977) சம்பா நதி (1979) ரெய்னீஸ் ஐயர் தெரு (1981) முதலிய மூன்று நாவல்களையும் குறுகிய காலகட்டத்திற்குள் தந்தவர். பத்தாண்டுகளில் முப்பத்தைந்து கதைகள், மூன்று நாவல்கள், ‘ஒரு நாள்’ … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்